எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இன்று முன்னெடுக்கப்படவுள்ள எரிபொருள் விலை மீளாய்வின் போது எரிபொருளின் விலை அதிகரிக்குமா? குறையுமா ? என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
உலக சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்தை நுகர்வோரும் அனுபவிக்கும் விதமாக இந்த விலை மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர் தெரிவித்திருந்தார்.
உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் விலை தற்பொழுது 55.13 டொலராக குறைவடைந்துள்ளதாக ஒபெக் அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, எரிபொருள் விலையை இந்த அரசாங்கம் குறைத்து மக்களுக்கு சலுகையை வழங்குமா? என்பது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றனர் என்பது மாத்திரம் உண்மையாகும்.