அமெரிக்காவில் சியாட்டில் நகரில் தூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கிரேன் திடீரென்று பயங்கர சப்தத்துடன் அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின் மீது வேகமாக விழுந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இதில் 6 கார்கள் சேதமைடந்தன.