முன்னாள் அதிபர் முஷாரப் 3 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் இருந்து மே 1-ல் பாகிஸ்தான் திரும்புகிறார்.முஷரப் மீது 2014-ல் தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார்.
ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார்.
இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஏப்.1ல் வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் முஷாரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர் மே 1- ம்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார். இத் தகவலை முஷாரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் தெரிவித்தார்.