ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடந்த ராணுவ தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர்.
கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். அங்கு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று பலியாகினர். 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.