கணவனின் ‘ஒப்பந்த கொலைக்கு’ பின்னால் மனைவி.

கணவனின் ‘ஒப்பந்த கொலைக்கு’ பின்னால் மனைவி.

கனடா-மாரக்கம் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவனின் ‘ஒப்பந்த கொலைக்கு’ பின்னால் இருப்பதாக இந்தியாவின் ஒரு கிராமப்புற பொலிசார் தெரிவித்துள்ளனர்.இப்பெண்ணின் கணவர் இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தற்சமயம் ரொறொன்ரோவில் வசிக்கும் பவான்டீப் கவுர் என்பவரே இக்கொலைக்கு காரணமானவர் என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இது குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடிய பொலிசாரை கேட்டுள்ளனர்.ஆனால் இந்திய அதிகாரிகள் சரியான வழியில் செயற்படும் வரை தங்களால் எதுவும் செய்ய முடியாதென கனடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
30-வயதுடைய ஜாஸ்கரன் சிங் கடந்த மார்ச் மாதம் ஒரு ஒதுக்குப்புற பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கனடாவிலிருந்து இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் சவாரா கிராமத்திற்கு சென்றிருந்த சமயம் இச்சம்பவம் நடந்துள்ளது.
கனடியரின் மரணம் சம்பந்தமாக இந்திய பொலிசார் நான்கு மனிதர்களை கைது கடந்த வாரம் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி தனது கணவரை கொலை செய்ய ரொறொன்ரோ பெரும்பாகத்திலிருந்து ஒழுங்குகள் செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் இந்திய பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து செய்யும் ஒரு ‘ஒப்பந்த கொலை’ போன்றதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்வதற்காக கவுர் 270,000 ரூபாய்களை [5,200டொலர்களை] அனுப்பினார்.பின்னர் மேலதிக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கவுரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் முயற்சிகளில் இந்திய பொலிஸ் சேவை ஈடுபட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான கவுர் மார்க்கத்தில் வசிக்கின்றார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News