உக்ரேனில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று கொல்லப்பட்டுள்ளார். ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (ஏஎவ்பி) நிறுவனத்தின் ஊடகவியலாளர் அர்மன் சோல்டின் எனும் வீடியோ இணைப்பாளர் ரொக்கெட் தாக்குதலில் நேற்று கொல்லப்பட்டார் என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஏஎவ்பியின் மற்றொரு ஊடகவியலளார்; தெரிவித்துள்ளார்.
உக்ரேனிக் கிழக்குப் பிராந்தியத்தில் பக்முத் நகருக்கு அருகிலுள்ள சசிவ் யாரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உக்ரேனிய சிப்பாய்கள் குழுவொன்றுடன் இருந்த ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் குழுவொன்று ரொக்கெட் தாக்குதலை எதிர்கொண்டது.
32 வயதான சோல்டினுக்கு அருகில் ஒரு ரொக்கெட் வீழ்ந்தது. அவருடன் இருந்த ஏனைய வீரர்கள் காயமின்றி தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.