இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பத்தாண்டுகளின் தொடக்கத்தில், இந்தியா மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் என்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான தனது விஜயத்தின் போது லண்டனில் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களிடம் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
உலகளாவிய கண்ணோட்டத்தில் நிலைமையை ஆய்வு செய்தால், இந்திய மரபணு மிகவும் வலுவானது. நமது அறிவுக்கு எந்த சவாலும் இல்லை. நாங்கள் எங்கு சென்றாலும், அற்புதமாக செயல்படுகிறோம். ஆனால் நம் நாட்டில் நாம் பாதிக்கப்படும் சில விடயங்களும் உள்ளன.
பல வளர்ந்த நாடுகள் சாதாரணமாக வளர்கின்றன. கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். நமது பாரதம், தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
பாரதத்தின் எழுச்சி தடுக்க முடியாதது. இந்த உயர்வு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் , நமது முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களை முந்திக்கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஆனது. தசாப்தத்தின் தொடக்கத்தில், நாங்கள் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருப்போம் என்றார்.