மூன்று கொலைகளை செய்த ‘Heart of a King’ எனப்படும் தெருக்கும்பல் முற்றாக அழிக்கப்பட்டது.

மூன்று கொலைகளை செய்த ‘Heart of a King’ எனப்படும் தெருக்கும்பல் முற்றாக அழிக்கப்பட்டது.

கனடா-ரொறொன்ரோ பொலிசார் குற்றச்செயல்கள் புரிந்தமை அல்லது தெருக்கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்பட்ட 50-ற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.டவுன்ரவுன் ரொறொன்ரோவில் இடம்பெற்ற குறைந்தது 3 கொலைகளிற்கு பின்னால் இவர்கள் இருந்துள்ளனர் எனவும் நம்பபடுகின்றது.
திட்டத்தின் உச்சக்கட்டமாக இடம்பெற்ற தேடுதல் வேட்டை ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடாத்தப்பட்டது. 32-பேர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 53பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என Police Chief Mark Saunders தெரிவித்துள்ளார். பெரும்பாலான கைத்துப்பாக்கிகள் உட்பட்ட 17துப்பாக்கிகள்,45,000டொலர்கள் பணம் Mercedes G-Wagon உட்பட ஆடம்பர வாகனங்கள் நான்கு, 110,000டொலர்கள் பெறுமதியான பென்ட்லி சங்கிலி, குண்டு துளைக்காத மார்பணி போன்றன பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் எண்ணிக்கையற்ற அளவு மரியுவானா, கொக்கெயின் மற்றும் கெற்றமைன் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Heart of a King கும்பல் கலிவக்சில் தெரியப்படும் ;“North Preston’s Finest எனப்படும் கும்பலை அடிப்படையாக கொண்டது.கைதான கும்பலில் உள்ளவர்களின் குடும்பங்கள் கலிவக்சில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கும்பலின் தலைவனான றிச்சட்சன் a.k.a. “Bam” அல்லது “Bambino,” பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளை பென்ட்லேயின் மேல் அமர்ந்திருக்கின்றார்.
கைதானவர்கள் மீது 285குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ganggang1gang2gang3gang4gang5gang6gang7

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News