Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா உடன் தலையிட வேண்டிய தருணம் | கிருபா பிள்ளை பக்கம்

November 7, 2021
in News, கட்டுரைகள், கிருபா பிள்ளை பக்கம்
0
உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டிய தருணம் இதுவாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தில் விடியலை ஏற்படுத்த வேண்டும். ”

அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய இந்திய நிச்சயமாக உதவும் என்று உயர்ஸ்தானிகர் கூறியுள்ளமை நினைவுகொள்ள வேண்டியது.

இனியும் காலத்தை தாழ்த்தாமல், உடனடியாக இந்தியா தலையிட்டு வடக்கு கிழக்கு மக்களை காப்பாற்ற வேண்டும். உடனடியாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாம் ஒன்றுபட்ட குரலில் வலியுறுத்த வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலாக அணுகாமல் தீர்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும். அல்லது கூட்டமைப்பு காப்பாற்றப்படும் என்பதையும் நினைவில் கொள்க.

இதனை தவிர்ப்பதனால் இந்தியா பேராபத்தை சந்திக்க சேரிடும். இந்த அபாயச்  சூழலை இந்தியா உணரத் தவறினால் அதன் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே இதனை கூட்டமைப்பு எடுத்துரைத்து  உணர்த்த வேண்டும்.

இந்த விடயத்தில் இலங்கை தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரே குரலுடன் வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். அதுவே தமிழ் தலைமைகளின் கடமையுமாகும்.

அதேபோன்று இந்த விடயத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகக் கட்சிகளும் முழு ஆதரவை நல்கி, காணி, பொலிஸ் அதிகாரம் அடங்கிய 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

கிருபா கிசான்

18.06.2021

http://Facebook page / easy 24 news

Tags: கிருபா பிள்ளை பக்கம்
Previous Post

சோனியா காந்தியை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Next Post

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Next Post
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க  வாய்ப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures