Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

November 7, 2021
in News, கட்டுரைகள், கிருபா பிள்ளை பக்கம்
0
மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய மேதகு படத்தை புலம்பெயர் தேசம், இன்னும் கொண்டாடாமல் இருப்பது வேதனையையும் அதிருப்தியையும் தருகின்ற செயலகும்.

இன்றையய கால கட்டத்தில், இந்திய, தமிழ் திரைப்படங்களை அதிகம் கொண்டாடுபவர்கள் புலம்பெயர் தேச மக்கள். அவர்கள்தான் பெரும் வருவாயையும் இந்தப் படங்களுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

அத்துடன் இந்திய திரை நட்சத்திரங்களை அழைத்து புலம்பெயர் நாடுகளில் பெரும் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அவை யாவும் சிறப்பான விடயங்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இச் சூழலில், மேதகு படத்தை மாத்திரம், புலம்பெயர் தேசம் கொண்டாட மறுக்கின்றது. ஒரு சில தனிப்பட்ட நபர்கள் மாத்திரம் படத்தை  பார்த்துவிட்டு தமது கருத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

தலைவரைப் பற்றிய குறித்த படத்திற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நானறிந்த வகையில் கனடா நாட்டில் எந்தவொரு தேசியம் சார் அமைப்பும் இதனைச் செய்யவில்லை என்பது ஏமாற்றம் தருவதாகும்.

மேதகு படத்தை எப்படி? எவ்வாறு? எந்த இணைப்பின் வழி சென்று பார்க்க வேண்டும் என்பதை குறித்த விழிப்புணர்வை, விளக்கத்தை இந்த அமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டும். இன்னும் பலர் படத்தை பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

மிகவும் குறைந்த கட்டணத்தில், இந்தியாவில் எழுபது ரூபாவை செலுத்தியும் கனடாவிலும் ஐந்து டொலரை செலுத்தியும் இந்த பாடத்தை பார்க்கலாம். இவை பற்றிய இத்தகைய விளக்கங்களை வழங்குவது இந்த படத்திற்கு நாம் அளிக்கும் ஆதரவு அல்லவா?

கொரோனா காலத்தில் சூம் கூட்டங்கள் பலவற்றை நடாத்தி, தேசியத்தை காப்பதாக சொல்பவர்கள், தேசியத்தையும் அதன் தலைமயையும் உன்னதமாக திரையில் காட்டிய மாபெரும் கலைப்படைப்பை போற்ற வேண்டுமல்லவா? இதற்காக ஒரு சூம் கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

பெரும் போராட்டங்களின் மத்தியில் உருவாகும் இத்தகைய கலைப்படைப்புக்களுக்கு கைகொடுப்பத எமது கடமை. இத்தகைய அர்த்த முள்ள செயல்களின் வழியாக தேசியம் சார் பயணத்தில் முன்னூதாரணமாக வாழ்ந்து காட்டுவோம்.

கிருபா கிசான்

http://Facebook page / easy 24 news

Tags: கிருபா பிள்ளை பக்கம்
Previous Post

திருமணப் பொருட்களின் பட்டியலில் முதலில் எழுத வேண்டியது

Next Post

இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்: சீன தூதரகம்

Next Post

இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்: சீன தூதரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures