''பிளாக் மெயில் படம் ரசிகர்களை படமாளிகையில் கட்டி போடும் திரில்லர் படைப்பாக இருக்கும்'' என அப்படத்தின் நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'பிளாக் மெயில்' எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ஏ. எல். விஜய், பி. வி. சங்கர், ரித்தேஷ், சதீஷ் செல்வகுமார் , தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். படத்தைப் பற்றி நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' இப்படத்தினை இயக்குநர் மு. மாறன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். அற்புதமான திரில்லர் ஜேனரிலான திரைப்படம் இது. படமாளிகையில் பார்க்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாதி நிறைவடையும் தருணத்திற்கு முன்பு வரும் நாற்பது நிமிடங்கள் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார். இந்த திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் - தேஜு அஸ்வினி- ஸ்ரீகாந்த்- பிந்து மாதவி - ரமேஷ் திலக் - 'வேட்டை' முத்துக்குமார் - உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.
Read moreமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (06) 36 வது நாளாகவும் சுழற்சி...
Read moreமன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார்...
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை கையாள்வது...
Read moreசிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் வேலைத்திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய தமிழர் தாயகமான வடக்கு -...
Read moreநடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தாவூத்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு...
Read moreஎனக்கு நடிக்கத் தெரியாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா நகைச்சுவையாக பதிலளித்தார். தனது இசையின் மூலம்...
Read moreபிரபல ரெப்பாடகர் மாதவ பிரசாத், 'மதுவா' என்பவருக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கில், கஹதுடுவ பொலிஸார் மற்றுமொரு பிரபல ரெப் பாடகரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஒரு...
Read moreஎல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம்...
Read moreமன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம்...
Read more