Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவில் மாணவர்களை அழைத்துச் சென்ற மூன்றாவது நாடாக இலங்கை!

February 1, 2020
in News, Politics, World
0

வூஹான் நகரிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் இன்று   பிற்பகல் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட தங்குமிட மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

வூஹான் நகரிலிருந்து மாணவர்களை தனது நாட்டுக்கு அழைத்துச் சென்ற மூன்றாவது நாடாக இலங்கை உள்ளது.

 

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் இருந்துவரும் உயர்மட்ட இராஜதந்திர உறவுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மீதும் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் சீன அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக மாணவர்களை உடனடியாக அழைத்துவரக்கூடியதாக இருந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின்பேரில் ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம், கொழும்பில் உள்ள சீன தூதரகம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை, இலங்கை இராணுவ மற்றும் விமானப் படைகள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாக இந்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன.

 

மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுள் 04 சிறு குழந்தைகளும் உள்ளடங்குவர். அனைவரும் அணிந்திருந்த ஆடைகளுக்குப் பதிலாக புதிய ஆடைகள் வழங்கப்பட்டு முழுமையான சுகாதார பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

 

அவர்கள் நல்ல ஆரோக்கிமான நிலையில் உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் தியத்தலாவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

இதற்கு சுகாதார வசதிகளுடன்கூடிய சொகுசு பஸ் வண்டி பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.

 

இராணுவத் தளபதியின் பணிப்புரையின்பேரில் 72 மணித்தியால குறுகிய காலப் பகுதியில் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இராணுவம் மற்றும் சுகாதார திணைக்களத்தை சேர்ந்த மருத்துவ குழுக்களும் பொதுச் சுகாதார அதிகாரிகளும் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

 

14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Previous Post

கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறை

Next Post

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடினால் நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும்

Next Post

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடினால் நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures