Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை

January 29, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய மாலை நிலவரப்படி 4,515 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. அந்த ஊருக்கு செல்வது, அந்த ஊரிலிருந்து வெளியூருக்கு பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் அல்லது முன்பே மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள்.

பலியான 106 பேரில் 100 பேர் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள். அந்த மாகாணத்தில் மட்டும் 2,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1.1 கோடி.
கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை உயர்வு, இறங்கு முகத்தில் பங்கு சந்தை – 10 தகவல்கள்படத்தின்
சீனாவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக தாய்லாந்தில்தான் 8 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் 5 பேரும், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4 பேரும், பிரான்சில் 3 பேரும், வியாட்நாமில் இருவரும், நேபாளம், கனடா, கம்போடியா, இலங்கை, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மத்திய அரசு செயலாளர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் 137 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 12 பேரை உடல் பரிசோதனை செய்ததாகவும், யாருக்கும் இந்த வைரஸ் தொற்று இல்லை என அரசு கூறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறையை ரத்து செய்துள்ளது இலங்கை.

கொரோனா வைரஸில் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்கா மற்றும் லண்டன் பங்கு சந்தைகள் இறங்கு முகத்தைக் கண்டன.

Previous Post

கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் மோதல்

Next Post

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தாக்கி பலியிடுக்கும் கொரோனா

Next Post

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தாக்கி பலியிடுக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures