Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்னும் 19 நாட்கள்: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையாளர்

October 28, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை பாதிக்கக் கூடிய வகையில் பாரிய முறைகேடுகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வழமைபோன்ற சாதாரண முறைப்பாடுகள் மட்டுமே பதியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதியப்படவில்லை. முறைப்பாடுகள் அத்தனையும் தேர்தல் குற்றமாக இதுவரையில் உறுதிப்படுத்தப் படவில்லை. முறைப்பாடுகளில் உண்மைத்தன்மையும் வெளிப்படுத்தப்படவில்லை.  தேர்தல் விதிகளை மீறும் வேட்பாளர்களின் பிரசார உத்திகள் காணப்பட்டாலும் கூட அதனைப் பெரும் சவாலாக நோக்க முடியாது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் செயலகமும் தபால் துறையும் இணைந்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காலகட்டத்தில் சகல பிரதேசங்களிலும் கணிசமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளது. நடக்கும் சம்பவங்கள் எதுவும் தேர்தலுக்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாதென்றே நம்புகின்றேன்.

பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் நாடு பூராவும் பாதுகாப்பு உசார் நிலையிலே வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் கடைசி வாரத்தில் மேலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படும்.

அதே சமயம் தேர்தலைக் கண்காணிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் சுமார் 100 பேர் இங்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய அமைப்பு, தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் குழுக்களாகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நாடெங்கும் சென்று கண்காணிப்புக்களை மேற்கொள்ள போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுக்கள் சுயாதீனமாகவே செயற்படும். அதில் எமக்கு எவ்விதமான தலையீடுகளும் கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் தத்தமது நாடுகளுக்குச் சென்ற பின்னரே அது குறித்த அவர்களது அறிக்கைகளை வெளியிடுவர். அதே சமயம் தேரதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் முப்பது பேர் கொண்ட கண்காணிப்புக்குழு தேர்தல் நடக்கும் தினத்தின் அவதானிப்புக்களை நடத்தவுள்ளனர்.

இவர்கள் முக்கியமான பிரதேசங்களுக்குச் சென்று கண்காணிப்புகளை முன்னெடுக்க போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதேசமயம் பிரசார நடவடிக்கைகளின் போது முடியுமானவரை விதிமுறைகளைப் பேணுமாறு நான் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

முக்கியமான ஒரு விடயம், கடந்த காலத் தேர்தல்களைப் போல் பதாதைகளோ, சுவரொட்டிகளோ பெரிதாகக் காணப்படவில்லை. இது ஒரு ஆரோக்கியமான செயலாகும். தேர்தலை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் தேர்தல் ஆணைக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 13ம் திகதி நள்ளிரவுடன் சகல பிரசார நடவடிக்கைகளும் முற்றுப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரசார சூனியகாலத்தில் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் எவராவது ஈடுபட்டால் அவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவசியப்படுமானால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவும் தயங்கப் போவதில்லை. இந்த ஒழுங்கு விதிகளை சரியாக கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களில் நேற்றுவரை 29 பேர் தமது வருமான சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 10 ஆயிரம் “ஹாட்போர்ட்” பெட்டிகளை பயன்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்த பலகையிலான பெட்டிகளை மட்டுப்படுத்துவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

400 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மாத்திரம் பலகையிலான பெட்டிகளை வழங்கவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ள“பிளாஸ்டிக்” பெட்டிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

டிரம்புக்கு ரணில் பாராட்டு!!

Next Post

சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – சென்னையில் இருந்து செல்லும் புதிய டிரில் பிட்!

Next Post

சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – சென்னையில் இருந்து செல்லும் புதிய டிரில் பிட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures