Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குப்பைகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் விபத்து

September 9, 2019
in News, Politics, World
0

கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியிலேயே இந்த விபத்து இன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குப்பைகளை ஏற்றி சென்ற டிபர் ரக லொறியொன்று, குப்பைகளை ஏற்றி சென்ற இன்னொரு டிபர் ரக லொறியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான டிபர் ரக லொறியின் முன்பக்கம் பலத்த சேதமைடைந்துள்ளதுடன், இந்த விபத்தின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து விபத்துக்குள்ளான டிபர் ரக லொறியை விபத்து அவசர பிரிவு வாகனம் பாதையில் இருந்து அப்புறப்படுத்தியதுடன், முந்தல் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இதேபோன்று கடந்த மாதம் 14ஆம் திகதியும் இவ்வாறு குப்பை ஏற்றிச் சென்ற லொறிகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் டிபர் ரக லொறியின் சாரதி ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வேட்பு மனு கோரப்படும் திகதியை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் இன்று

Next Post

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பேரணிகள்

Next Post

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பேரணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures