மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த சட்டமூலம் எதிர்வரும் 19ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்நிலையில் இந்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோருக்கு பிரதியிட்டு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பாக வங்கித்துறை நிபுணர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுங்கட்சி, இந்த சட்டமூலத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.