காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று மராட்டிய மாநிலம் புனே, அருகே உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அன்னா ஹசாரேவின் நெருங்கிய உதவியாளர்,
‘சளி காரணமாக, அவருக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இருமல் மற்றும் உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை, அவர் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.