மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடுப் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தோட்டப் பயிர்ச் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் அதிகளவான தோட்டங்களில் கத்தரிச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மழை இல்லாத காரணத்தால் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதன் மூலமே செடிகள் வளர்க்கப்படுகிறன.
எனினும் செடிகளில் அதிகளவான பூக்கள் பூப்பதில்லை என்றும் ஆகக் குறைந்தளவு காய்களே காணப்படுவதாகவும் அவர்கள் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் எவ்வளவுதான் நீர் இறைத்தாலும் இடையிடையே மழை பெய்ய வேண்டும் என்றும் அப்போது தான் செடி பசுமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதுடன் அதிகளவாக காய்க்கும் தன்மை கொண்டிருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.
தற்போது மழை இல்லாமல் வறட்சியாக நிலங்கள் இருப்பதால் ஒன்றை விட்டு ஒரு நாள் நீர் இறைப்பதாகவும் வறட்சி காரணமாக கத்திரி செய்கை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கத்திரி செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்..

