Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது டோரியன் புயல்

September 2, 2019
in News, Politics, World
0

மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசுமுறை பயணமாக போலாந்து செல்ல இருந்த டிரம்ப், தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளார். இந்நிலையில் 5ம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டோரியன் புயல் நேற்று காலை 12.40 மணிக்கு வடக்கு பஹாமஸ் அருகே உள்ள அபாகோ தீவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக மரங்கள் பேயாட்டம் ஆடின. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக தரையைத் தாக்கின.

கடலோரக் குடியிருப்புகள் அனைத்தும் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தற்போது அபாகோ தீவில் புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலின் கண் பகுதி மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதால் டோரியன் புயல் இன்று இல்லது நாளை பஹாமஸ் தீவுகளைத் தாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையும் தாக்கும் வாய்ப்பு இருப்பதைகவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதேபோன்ற சக்திவாய்ந்த புயல் கடந்த 1992ம் ஆண்டு பஹாமாவை தாக்கியபோது 65 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் டோரியன் புயலின் தாக்கம் அதிகம் இருக்கக் கூடும் என்ற தகவலால் கடலோரப் பகுதிகளில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுங்குச் செல்லுமாறு மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா ஆகிய பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

Next Post

கட்டப்பாவாக மாறிய சாண்டி

Next Post

கட்டப்பாவாக மாறிய சாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures