Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றி

August 5, 2019
in News, Politics, World
0

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. செயற்பட்டாலும் எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியடைவாரென எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,“ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றது.

அக்கட்சி எவ்வாறு செயற்பட்டாலும், எதிர்வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய என்று மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித், கரு என்று இருவருக்கிடையில் மூண்டுள்ளது.

இதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது குறித்து ஐ.தே.க.இறுதி தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அவதிப்படுகின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி” என மஹிந்த தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை

Next Post

ஸ்பெயினில் காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதி கருகியது

Next Post

ஸ்பெயினில் காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதி கருகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures