Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனக்கு அறிவு வளர்ந்துள்ளதுதான் பலருக்கு பிரச்சனை -மனோ

July 24, 2019
in News, Politics, World
0

நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்.ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (22) மதியம் மட்டக்களப்பு பட்டிருப்பு துறைநீலாவணை மகா வித்தியாலயத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த அவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சிங்களம் படித்த தமிழர்களை படிக்காமல் அன்றைய முட்டாள்தனமான ஆட்சியாளர்கள் செய்துவிட்டார்கள் . நாங்கள் இவற்றை மாற்றியமைத்திருக்கின்றோம். மொழிக் கல்வியை நாங்கள் விருத்தி செய்வதால் தான் அறிவு வளர்ச்சியைப் பெற முடியும். எனக்கு மூன்று மொழிகள் தெரியும். அதனால் எனக்கு அறிவு வளரும். ஒரு மொழி காரர்களை விட எனக்கு அதிகமாக வளர்ந்து உள்ளது. அதுதான் தற்போதைய பிரச்சினை ஆகும்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ் முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால் தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்று சேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும்.

நான் நாடு முழுக்க உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க்க முயல்கிறேன். அது வடக்காக இருந்தால் என்ன கிழக்காக இருந்தால் என்ன மலையகமாக இருந்தால் என்ன இலங்கைத் தீவுக்குள் எங்கிருந்தாலும் தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டும்.

ஆனால் ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர்.அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகின்றேன். எனக்கு தலைமை தேவையில்லை.

நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன். அவர்கள் நாடு முழுக்க தலைவர்களை சேர்த்து உயர்ந்த பெரும் தலைவனாக மாறிவிடுவானோ என்று அஞ்சுகிறார்கள் சந்தேகப்படுகிறார்கள் நான் அப்படியான எண்ணத்தோடு இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

வடக்கிலோ கிழக்கிலோ மலையகத்திலோ வாழும் தமிழர்கள் எனது உறவுகள் அனைத்து ஊர்களும் எனது ஊர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கிற்கேற்ப வாழ வேண்டும். அதைவிடுத்து பிரதேசவாதம் பேசினால் தந்தை செல்வா அவர்களின் வாய்ச்சொல் போல தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எனது கருத்துக்களை எதிர்க்க வேண்டாம். நான் உழைப்பது தமிழ் மக்களுக்காக மாத்திரமல்ல சிங்கள இமுஸ்லிம் மக்களுக்காகவும் சேர்த்து உழைக்கிறேன்.சிங்கள மக்கள் நல்லவர்கள் என்பதற்கு நானே சாட்சி. ஒரு சில அரசியல்வாதிகளால் அம்மக்கள் பிழையான வழிக்கு இட்டுச் செல்கின்றனர்.

நமது நாட்டிலே நிறைய பேர் இருக்கின்றனர் தாங்களும் செய்ய மாட்டார்கள் செய்கின்றவனையும் விட மாட்டார்கள். முடியாது என்று சவால் விட்டால் செய்து காட்டுவது எனது குணம்.

தாய்மொழியை மறக்கும்படி மனோ கணேசன் சொன்னார் என புரளியை கிளப்பி விடாதீர்கள் என்று ஊடகவியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இதை அரைகுறையாக கேட்ட அரசியல்வாதிகள் அப்படி செய்வார்கள்.

வடக்கு கிழக்கில் வந்து சிங்களம் படியுங்கள் என்று மாணவர்களை கூறும் இதேவேளை தெற்கிலே போய் தமிழ் படியுங்கள் என சிங்கள மாணவர்களுக்கு கூறிவருகிறேன் இதுவே உண்மை.

இளைஞர்கள் நாட்டை பொறுப்பெடுக்க வேண்டும் எனக்கூறும் தலைவர்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வரும் வேளை இடம் கொடுக்காமல் படுத்துக் கொள்கின்றனர். விட்டுக்கொடுக்காமல் இருப்பவர்கள் ஏன்தான் இளைஞர்களை அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார்களோ தெரியவில்லை. நான் அப்படிப்பட்டவர்களே இளைஞர்கள் அரசியலுக்கு வரும்போது நான் அவ்விடத்திலேயே இருக்கமாட்டேன் . இருக்கும் வரை இந்த மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.

மட்டக்களப்புத் தமிழர்கள் பேசும் மொழியில் இனிமை இருக்கிறது பேசும்போது சங்கீதம் போல் இருக்கும் அவர்கள் உச்சரிப்பில் ஒரு தெளிவு இருக்கிறது இதுவே எனக்கு கிழக்கு மண்ணில் உள்ள காதலுக்குக் காரணம் என தெரளிவுபடுத்தினார்.

மேற்படி நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் அமைச்சின் கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டஇணைப்பாளருமான க.கோபிநாத் மற்றும் பாடசாலை அதிபர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம்

Next Post

கேரளாவில் கனமழைக்கு மேலும் 3 பேர் பலி

Next Post

கேரளாவில் கனமழைக்கு மேலும் 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures