Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்தனர்

July 9, 2019
in News, Politics, World
0

செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்படவுள்ள சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஒகஸ்டு மாதமளவில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம் மற்றும் அமைப்பு, காந்தப்புலம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அத்துடன், செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? உள்ளிட்ட விடயங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

குறித்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் செல்லும் எனவும், இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தால், 2021ஆம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும் எனவும் நம்பிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி!

Next Post

வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது

Next Post

வைகோவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures