Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்முனையை 3 ஆக பிரிக்க, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் யோசனை

July 4, 2019
in News, Politics, World
0
உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
அவருடன் கலாநிதி பி.விக்னேஸ்வரனும் சமுகமளித்திருந்தார்.
உரிய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜிடம் கையளிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் பற்றிய தெளிவூட்டலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின்படி எந்தவொரு இனமும் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கூறியதாவது;
பழைய நிருவாக அலகான இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக் காரியாதிகாரி பிரிவு (D.R.O. DIVISION) முறை நீக்கப்பட்டு பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் (A.G.A.Division) ஏற்படுத்தப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் ஒரு தனியான ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவான கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இது சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய தமிழ் – முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியிருந்தது.
இப்பிரிவு உருவான ஆரம்பகாலத்திலிருந்தே அதாவது 1980களிலிருந்தே கல்முனைத் தமிழர்களின் கோரிக்கை என்னவாக இருந்தது என்றால் இத் தனியான ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவைக் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரு தனித்தனி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக அதாவது சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடிக் கிராமங்களை உள்ளடக்கிய தென்பகுதியை நூறுவீதம் முஸ்லிம் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும், கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணைக் கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியைத் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாழும் தமிழ்ப் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும் ஆக்கித்தரும்படியே.
இக்கோரிக்கையை அடுத்தே 12.04.1989 அன்று ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் கல்முனை வடக்குக்கென்று உப செயலகம் ஒன்று திறக்கப்பெற்று அதற்குப் பொறுப்பாகத் தமிழ் உதவி அரசாங்க அதிபர் ஒருவரும் நியமிக்கப்பெற்றார். இவர் முழுமையான அதிகாரம் கொண்ட அலுவலர் அல்ல.
மேலே குறிப்பிட்ட வடபகுதியில் அமைந்த கிராம சேவகர்களில் தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கல்முனை வடக்கு உப செயலகத்திற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபரின் கீழும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் பிரதான அலுவலகத்திற்குப் பொறுப்பான அதாவது முழுக் கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த உதவி அரசாங்க அதிபரின் கீழும் கடமையாற்றப் பணிக்கப்பட்டனர். இந்த ஏற்பாடு அன்றிருந்த களநிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடே தவிர இது வழமையான அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிருவாக ரீதியான நடைமுறை அல்ல.
இவ்வாறு 12.04.1989 இல் ஏற்படுத்தப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தான் இன்றுவரை கடந்த முப்பது வருடகாலமாகப் பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
பின்னாளில் கிராமசேவகர் பிரிவுகளில் ஏற்பட்ட எல்லைகள் மீள்நிர்ணயத்தின் விளைவாகத் தற்போது இவ் உப-பிரதேச செயலகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளரின் கீழ் (உதவி அரசாங்க அதிபர் பிரிவு பின்பு பிரதேச செயலகப் பிரிவு என்றும் உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் என்றும் பெயர் மாற்றம் அடைந்தது) 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராமசேவகர்கள் கடமையாற்றுகின்றனர். இந்த 29 கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சேனைக்குடியிருப்பு மற்றும் நற்பிட்டிமுனைத் தமிழ்ப் பிரிவு ஆகியவற்றில் பூகோள ரீதியாக நிலத்தொடர்புள்ள வகையிலே அடங்கியுள்ளவை.
அதேவேளை கல்முனை வடக்கு எனக் குறிக்கப்படும் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் தற்போது 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகள் மேலே குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவைகள் பிரிவுகளுக்கும் மேலதிகமாக உள்ளன. இவற்றிற்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதான பிரதேச செயலகப் பிரிவுக்குப் (கரவாகுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவு அல்லது கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு) பொறுப்பான அதிகாரம் படைத்த பிரதேச செயலாளரின் கீழ் கடமையாற்றுகின்றனர்.
இந்த 15 முஸ்லிம் பெரும்பான்மை கிராம சேகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு, மருதமுனை, நற்பிட்டிமுனை முஸ்லிம்பிரிவு மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றில் பூகோளரீதியாக நிலத்தொடர்பற்ற வகையிலே அடங்கியுள்ளவை.
இப்பிரதான முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின்கீழ் (கல்முனை முஸ்லிம் செயலகப் பிரிவு) மேற்கூறப்பட்ட கல்முனை வடக்குப் பிரதேசத்தில் அமைந்த ஆனால் நிலத்தொடர்பற்ற 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுடன் கல்முனைக் குடிக் கிராமத்தில் நிலத்தொடர்புள்ள வகையில் அமைந்துள்ள 14 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுடன் சேர்த்து அதிலும் மொத்தம் 29 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன.
இப்படியிருக்கையில் கடந்த முப்பது வருட காலத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒன்று : முழுக்கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பெற்றுச் சாய்ந்தமருதுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு 2001 இல் உருவாக்கப்பட்டது. இது தற்போது முழு அதிகாரம் படைத்த பிரதேச செயலகப் பிரிவாக இயங்கிவருகிறது. இது 100% முஸ்லிம்களைக் கொண்டதாகும். அதன் தற்போதைய சனத்தொகை 31,055 ஆகும்.
மற்றது : மேற்குறிப்பிட்ட கல்முனை வடக்குப் பிரதேசத்தில் நிகழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் குடிப்பரம்பல் மாற்றம்.
12.04.1989 இல் நிறுவப்பெற்ற உபசெயலகப் பிரிவின் கீழ் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட மேற்குறிப்பிட்ட 29 தமிழ்ப்பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதான உபபிரதேச செயலகத்தையே தரமுயர்த்தித் தருமாறு எழுந்தமானமாகத் தமிழர்தரப்புக்கோருவது ‘கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு’ என்பதன் உண்மையான தாற்பரியத்தை உணர்த்துவதாயில்லை.
மேற்படி 29 தமிழ்ப்பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதாக உத்தேச கல்முனை வடக்குப் (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவு உருவானால் மேலே குறிப்பிட்ட 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்பற்ற வகையிலே கல்முனை முஸ்லிம் செயலகப் பிரிவின் கீழ் தொடர்ந்திருப்பது ஒரு பிழையான முன்னுதாரணமும் நிர்வாகச் சிக்கல் நிறைந்ததுமாகும். இந்த விடயம்தான் தீர்வுக்குத் தடையாகவும் உள்ளது. எனவே நடைமுறைச் சாத்தியமான பின்வரும் தீர்வு யோசனைகளை முன்வைப்பது நோக்கமாகும்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு எனும்போது பூகோள ரீதியாக அதன் வரையறுக்கப்பெற்ற எல்லைகள் வருமாறு.
வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லை அதாவது பெரிய கல்லாறு கிராமம் (பெரியநீலாவணைக் கிராமம் வரை)
தெற்கு : கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி (கல்முனைக்குடிக் கிராமம்)
கிழக்கு : வங்காள விரிகுடாக் கடல்
மேற்கு : கிட்டங்கி வாவி
இந்த எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு என்பது பூகோளரீதியாக நிலத்தொடர்புள்ள வகையிலே மேற்குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக்; கிராமசேவகர் பிரிவுகளையும் 15 முஸ்லிம் கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தம் 44 கிராமசேவகர் பிரிகளை உள்ளடக்கியதாக அமைகிறது. அதாவது இந்த 44 கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்புள்ள வகையிலேயே அமைந்துள்ளன.
ஆனால் இதன் குடிப்பரம்பல் பின்வருமாறு அமைகிறது.
முஸ்லிம் :     31,338
தமிழர்     :     31,199
சிங்களவர்:       168
ஏனையோர்:   1,083
மொத்தம்  :   63,788
இது முஸ்லிம் பெரும்பான்மையாகவும் தமிழர்களும் முஸ்லிம்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்டச் சமனாகவும் அமைவதால் கடந்த முப்பதுவருடகால கல்முனைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமாட்டாது.
ஆகவே இது திருப்தியான தீர்வாகமாட்டாது. அனால் இதற்குள் பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவும் (KP72 மற்றும் KP72A ஆகிய கிராமசேவகர் பிரிவுகள்) மருதமுனைக் கிராமமும் (KP/67, KP/67A ,KP/67B, KP/67C,KP/67D ,KP/68 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள்) மொத்தம் 08 கிராமசேவகர் பிரிவுகள் அடங்குகின்றன.
பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவும் மருதமுனைக் கிராமமும் அருகருகே நிலத்தொடர்புள்ளவை. இதன் மொத்த சனத் தொகை (100% முஸ்லிம்) 17,433 ஆகும். அதாவது மேலே குறிப்பிட்ட 15 முஸ்ஸிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளில் இந்த 8 கிராம சேவகர் பிரிவுகள் மட்டுமே நிலத்தொடர்புள்ளவை. இதனைத் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக (இல: 1) உருவாக்கமுடியும். அப்படி ஆக்கும்போது கல்முனைவடக்குப் பிரதேசத்தில் எஞ்சிய 36  (44 – 08 = 36) நிலத்தொடர்போடு கூடிய கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் குடிப்பரம்பல் பின்வருமாறு அமைகிறது.
தமிழர்     :     31,999
முஸ்லிம்  :     13,895 (31,338 – 17,433 = 13,895)
சிங்களவர்:     168
ஏனையவர்கள்   :     1,083
மொத்தம்  46,345 (63,788 – 17,443 = 46,345)
இது நிலத்தொடர்புடையதாக இருப்பதனாலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என (ஏனையவர்களுள் பறங்கியர் அடங்குவர்) மூவின மக்களைக் கொண்டதாகவும் இருப்பதனாலும் இதனையும் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக (இல.2) உருவாக்க முடியும். இது தமிழர்களுக்குத் திருப்தியான தீர்வாகும்.
அப்படி ஆக்கும்போது கல்முனை முஸ்லிம் பிரிவில் எஞ்சியிருக்கின்ற 14 கிராமசேவகர் பிரிவுகளையும் அதாவது கல்முனைக்குடியை இன்னுமொரு தனியான பிரதேச செயலகப் பிரிவாக (இல.3) உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும்போது இந்த உத்தேச மூன்றாது பிரிவின் மொத்த சனத்தொகை (100% முஸ்ஸிம்) 23,830 ஆகும்.
இதுவே தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதிலுள்ள (நிலத்தொடர்பற்ற பிரச்சினை உட்பட) பிரச்சினைகளைத் தீர்த்துப் புதிய பிரதேசசெயலகங்களை உருவாக்குவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும். மேற்கூறப்பட்ட இல:1(உத்தேச மருதமுனை பிரதேச செயலகப் பிரிவு), இல:2 (உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு), இல: 3 (உத்தேச கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு என மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமானது.
அப்படி உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கென்று 100%முஸ்ஸிம்களைக் கொண்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் (இல:1, இல. 3) தமிழர்களுக்கென்று தமிழ், முஸ்லிம், சிங்களவர்களைக் கொண்ட தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றும் (இல: 2) அமைய வாய்ப்புள்ளது என்றார்.
Previous Post

பாடசாலைக்குள் புகுந்த நபர், இராணுவத்தால் சுட்டுக் கொலை

Next Post

மகன் சுகயீனமுற்றிருப்பதால், பாடசாலைக்கு ஓடிய தந்தையே சுட்டுக்கொலை – இராணுவ வீரர் கைது

Next Post

மகன் சுகயீனமுற்றிருப்பதால், பாடசாலைக்கு ஓடிய தந்தையே சுட்டுக்கொலை - இராணுவ வீரர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures