Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

June 9, 2019
in News, Politics, World
0
அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்த படுதோல்வி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, ‘கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும்’ என, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போர்க்குரல் எழுப்பியிருப்பது, மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு இருந்தது. தமிழகத்தில், 1996ல் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது. 91 – 96 வரை ஆட்சியிலிருந்தும், நான்கு இடங்களில் மட்டுமே, அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே தோல்வியை தழுவினார்.அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, கிளை செயலர்கள், தொண்டர்கள் என, அனைவரையும் அழைத்து, கட்சி தோல்விக்கான காரணத்தை, ஜெ., கேட்டறிந்தார். அதன் விளைவாக, 2001 தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது.அடுத்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தோல்வியை சந்தித்தது.
மீண்டும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து, ஜெ., ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், 40க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை நியமித்தார். தலைமை நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை மாற்றங்கள் செய்தார்.இதன் காரணமாக, 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், 68 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.இவ்வாறு, தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை கட்டுக்கோப்பு குலையாமல், ஜெ., நடத்தி சென்றார். தற்போது, ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., என்ற, இரட்டை தலைமை காரணமாக, கட்சி கட்டுப்பாடின்றி உள்ளது. கேப்டன் இல்லாத கப்பல் போல தத்தளித்து வருகிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 2021 வரை, ஆட்சியை நடத்தி செல்வதில் தான், கவனம் செலுத்துகின்றனர்; கட்சி நிலைக்க வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவில்லை. தோல்விக்கு காரணமானவர்கள் குறித்து, வேட்பாளர்கள் முறையிட்டும், தவறு செய்தவர்கள் மீது, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தேர்தலுக்கு முன், முதல்வர், இ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கைகளே ஓங்கி இருந்தன. அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேர்தல் முடிவுக்கு பின், இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் செல்வாக்கு குறைந்துள்ளது.ஏனெனில், இ.பி.எஸ்.,சின் சொந்த தொகுதியான, எடப்பாடியில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. தேனியில், ஓ.பி.எஸ்., மகன் வெற்றி பெற்றுள்ளார். மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. ஓ.பி.எஸ்., சொந்த தொகுதியான, போடியில், தி.மு.க.,வை விட, 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல், அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றனர். இதனால், அமைச்சர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், கட்சி உடையும் அபாயம் உள்ளது.
இதை பிரதிபலிக்கும் வகையில், மதுரை வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, நேற்று, ‘கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை. பொதுக்குழுவை கூட்டி, கட்சியை வழிநடத்தும் திறமை உடையவரை, தேர்வு செய்ய வேண்டும்’ என, குரல் கொடுத்துள்ளார். இது, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியை வளர்க்க, ஆட்சியை தக்க வைக்க, முதல்வரும், துணை முதல்வரும், முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இரட்டை தலைமை என்பதால், யார் சொல்லுக்கு கட்டுப்படுவது என தெரியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என, பல அதிகார மையங்கள் இருந்தபோதிலும், யாரும் யாரோடும் எந்தவித ஆலோசனையும் நடத்துவதில்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தனித்தே செயல்படுகின்றனர்.தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும், அதற்கான காரணம் குறித்து, ஆராயாமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே, உடனடியாக தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரையும் அழைத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, கேட்டறிய வேண்டும்.தோல்வியடைந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், கட்சிக்காக பாடுபடுவோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி அல்லது வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும். கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து அறிந்து, அதற்கு ஏற்ப, கட்சியை வழிநடத்த வேண்டும்.ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டும். ஒற்றை தலைமை இருந்தால் நல்லது என முடிவெடுத்தால், ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.இத்தகைய அணுகுமுறைகள் வாயிலாக, கட்சியை பலப்படுத்தினால் தான், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலிலும், கட்சி களமிறங்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

Previous Post

25 அமைச்சர்கள் பதவியேற்றனர்: நடிகை ரோஜாவுக்கு பதவி வழங்க மறுப்பு

Next Post

கேரளாவில் துவங்கியது பருவமழை

Next Post
கேரளாவில் துவங்கியது பருவமழை

கேரளாவில் துவங்கியது பருவமழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures