Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்

May 28, 2019
in News, Politics, World
0

தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஜனநாயகத்தை மீறும் செயற்பாட்டையே அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

மாத்தறையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்ததையடுத்து அனைவரும் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தோம்.

இன்று விகாரைக்குச் செல்லக்கூட எமக்கு அச்சமாக இருக்கிறது. மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கூட, விகாரைகள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் தற்போது, மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அத்தோடு, இன்று எமது சமூகத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

குருணாகலில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

எமது பெண்கள் எத்தனைப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக்கூட, இன்னொருவர்தான் முடிவு செய்துள்ளார். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

அத்தோடு, அன்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட காலத்தில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அதனை ஒரு நாளில் சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்தார். இதற்காக தெரிவுக்குழுவை அமைக்கவில்லை.

ஆனால், இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள போதுமட்டும், தெரிவுக்குழுவை அரசாங்கத்தினர் ஸ்தாபித்துள்ளனர்.

உண்மையில், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக எவரேனும் செயற்பட்டால், அவர்களுக்கு இனிமேல் வாக்குக் கேட்டு கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டும் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, தனிப்பட்ட நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதல்ல. எமக்கும், அவருக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது.

எனினும், இந்தத் தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு உதவிகளை செய்தார் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனாலேயே நாம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம்” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கை படையினருக்கு பீஜிங்கில் சிறப்புப் பயிற்சி

Next Post

போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

Next Post

போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures