Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

May 25, 2019
in News, Politics, World
0

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளோ இல்லையென சபையில் ஆளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சபை முதல்வரும் தனது எதிர்ப்பை இதில் தெரிவிப்பதாக கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் விவாதம் இடம்பெற்றது, விவாதத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய போதும் பாதுகாப்பு அமைச்சரோ, இராஜாங்க அமைச்சரோ, பாதுகாப்பு செயலாளர், அதிகாரிகள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என எவரும் இல்லாது சபை வெறுமையாக இருந்தது. இதன்போது உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில் சபையை வழிநடத்திய பிமல் ரத்நாயக எம்.பி உடனடியாக இதனை சபாநாயகருக்கு அறியப்படுதினார்,

பின்னர் விவாதம் தொடர்ந்த நிலையில் இடையில் சபையில் இருந்து கருத்தை முன்வைக்க எழும்பிய சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவசரகால சட்டம் குறித்த விவாதம் நடக்கும் போது சம்ரதாயப்படி முப்படை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர் இருக்க வேண்டும். அவர்கள்தான் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். கடந்த முறை வரவும் இல்லை, இன்றும் வரவில்லை. ஏன் இவ்வாறு செய்கின்றனர் என அதிகாரிகளிடம் வினவினேன். இவர்கள் கண்டிப்பாக சபையில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை என்றார்.

இதன்போது சபாபீற்றதில் தலைமை தாங்கிய பிமல் ரதனாயக எம்.பி:- இதற்கு முன்னரும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சபாநாயகருக்கு தெரியப்படுத்தினேன். நானும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான விவாதங்களில் கலந்துகொண்டுள்ளேன். அமைச்சர்கள், அதிகாரிகள் அப்போதெல்லாம் இருந்தார்கள். இம்முறை மிகவும் மோசமாக உள்ளது, ஆகவே சபாநாயகர் மற்றும் செயலாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது மீண்டும் பதில் கூறிய சபை முதல்வர் :- எனக்கு நினைவுள்ளது , 1980 களில் இந்திய இராணுவம் இருந்த காலத்திலும், அதேபோல் ஜே.வி.பி புரட்சிக் காலத்திலும் கூட இவ்வாறான அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் தான் இந்த விவாதங்களை ஆரம்பித்து வைப்பார்கள். இன்று மிகவும் மோசமாக உள்ளது. கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க எவரும் இல்லை. இது மிகவும் மோசமான நிலைமை என்றார்.

சபாபீடத்தில் தலைமை தாங்கிய பிமல் ரத்நாயக :- நான் மீண்டும் சபாநாயகருக்கு இது குறித்து தெரியப்படுத்துகின்றேன்.

ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சி.பி. ரத்நாயக எம்.பி :- இது மிகவும் மோசமானது, பாதுகாப்பு படைகள் இல்லாது, பாதுகாப்பு செயலாளர் இல்லாது அதிகாரிகள் இல்லாது நாம் வீணாக இங்கு பேசிக்கொண்டுள்ளோம் என்ற உணர்வே உள்ளது. சபாநாயகர் முதலில் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கீழ்த்தரமாக செயற்பட இடமளிக்கக்கூடாது என்றார். இதன்பின்னர் உரையாற்றிய பிரதிநிதிகளும் குறித்த காரணம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்துயும் பாதுகாப்பு அமைச்சையும் விமர்சித்தே உரையாற்றினர்.

Previous Post

மோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

Next Post

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

Next Post

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது - டக்ளஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures