டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்றைய தினம் திடீர் என தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள இவர் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலுக்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அங்காய் என்ற மூன்று பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

