வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடுகளை நாளை (5) பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்புக்குப் பின்னர் இதை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதியொதுக்கீடுகளும் கடந்த மார்ச் 28ம் திகதி எதிர்க்கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

