ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் கடந்த 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து புலம்பெயர் தமிழ் அமைப்பொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பின் பேச்சாளர் சாம் பரி இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு முதல் இவ்வாறு ஒரே மாதிரியான 7 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதில் குறைந்த அளவான நீதியே கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் உதவும் வகையிலேயே அமைந்துள்ளது எனவும் அவர் இதன்போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பிற்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

