Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்னமும் மூன்று மாதத்தில் மாகாணசபை தேர்தல்

March 30, 2019
in News, Politics, World
0

மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு நிலுவைக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். நானும் அதையே வலியுறுத்தி வருகின்றேன். இது குறித்து பிரதமருடனும் பேச்சு நடத்தப்பட்டது.

எனினும், தேர்தலை நடத்துவதற்காக இயற்றப்பட – திருத்தப்படவேண்டிய சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் காரணமாகவே காலம் தேவைப்படுகின்றது. எனினும், விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.

எது எப்படியிருப்பினும், எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழில் 1500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Next Post

புதுவருடப் பிறப்பு காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது

Next Post

புதுவருடப் பிறப்பு காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures