விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சசி ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இப்படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். லிஜோமோல் ஜோஸ், காஷ்மிரா பர்தேசி படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவந்துவிட்டதாக படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். “இயக்குனர் சசி, சித்தார்த் ஆகியோர் உடனான அற்புதமான பயணம் நிறைவடைந்தது. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்பிடிப்பு நிறைவு. அற்புதமான கதை,” என பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ், சித்தார்த் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. ஜிவி பிரகாஷ் தொடர்ச்சியாக பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால், சித்தார்த் நடித்து கடைசியாக ‘அவள்’ படம் 2017ல் வெளிவந்தது. அவர் நடித்து கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படம் கூட வரவில்லை.
படப்பிடிப்பு நிறைவடைந்தை முன்னிட்டு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு அல்லது டீசர் வெளியீடு நடக்கலாம்.

