Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா ஓமந்தையில் வாள்வெட்டு

March 15, 2019
in News, Politics, World
0

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலிற்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

கால் மற்றும் கைகளில் வாள் வெட்டு காயங்களுடன் வசந்தகுமார் (வயது – 37) , கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் கருணாகரன் (வயது – 33) என்பவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வரலாற்று சிறப்பு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று

Next Post

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள்

Next Post

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures