ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அல்ல தோற்கடிக்க வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு தகுந்த பாடத்தை ஐ.தே.க. புகட்ட வேண்டும். அதற்கு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை மாத்திரம் தோற்கடித்துப் போதாது. நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையே கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

