Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் வசந்த கரன்னகொட

March 11, 2019
in News, Politics, World
0

முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி தலைமறைவாகியுள்ள அவர், இன்று  கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாவாரென கூறப்படுகிறது.

இதன்போது அவரிடம் குற்றச்சாட்டு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படுவதுடன், வாக்குமூலமும் பெறப்படவுள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையிலேயே தன்னைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்சநீதிமன்றம், அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எத்தியோப்பியா விமான விபத்து – 18 கனேடியர்கள் உயிரிழந்தமை உறுதி!!

Next Post

நாளை மறுதினம் சுகயீன விடுமுறை போராட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

Next Post

நாளை மறுதினம் சுகயீன விடுமுறை போராட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures