பிரபல பின்னணி பாடகர் மனோ. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். முன்பு போல் சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் ஏற்பாட்டின்
பேரில், அந்தக்கட்சியின் கழக துணைப்பொது செயலாளர் டிடிவி.தினகரனின் முன்னிலையில் தன்னை இணைந்து கொண்டார்.

