Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாக்கந்துர மதுஷ் 700 கோடி இரத்தினக்கல்லை எப்படி கொள்ளையடித்தான்?

February 28, 2019
in News, Politics, World
0
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது… முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை.
இன்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ் ஆதரவு சட்டத்தரணிகள் முயற்சிகள் எடுத்தனர் என்று ஒரு தகவல்.
நாளை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் பொலிஸ் அனுமதி கோரவுள்ளதாக சொல்லப்படுகிறது…
இரத்தினக்கல் விவகாரம்…
இரத்தினக்கல் கொள்ளை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன..
கொள்ளைக்கு சென்ற ரீமை இரண்டாக பிரித்த மதுஷ் வாடிக்கையாளராக செல்ல ஒரு ரீமும் அவர்களை மடக்கும் பொலிஸாக நடிக்க மற்ற ரீமையும் தயார் செய்துள்ளார்…
ஒரு குழுவுக்கு தெரியாமல் மற்ற குழு செயற்படுவதை கண்காணித்த மதுஷ் பொலிஸாக சென்ற குழுவிடம் விடுத்த எச்சரிக்கை “ யாரின் உயிருக்கும் ஆபத்தில்லாமல் கேமை முடியுங்கள்” என்பது தான்…
ஒஸ்ட்ரிய பிரஜையுடன் சென்ற முதல் குழு வாடிக்கையாளராக சென்றது. அவர்கள் இரத்தினக்கல்லை ஆராய்ந்து கொண்டிருந்தபோது திடீரென பொலிஸ் சீருடையுடன் புகுந்த மற்ற குழு இந்த வெள்ளையர் இன்ரநெஷனல் கொள்ளைக்காரர் என்றும் அவருக்கு இன்ரபோல் ரெட் நோட்டீஸ் இருப்பதால் அவரை கைது செய்வதாகவும் கூறி விலங்கை மாட்டியுள்ளது…
அதேசமயம் இரத்தினக்கல் வர்த்தகரை தாக்கி அவர் கையில் இருந்த கல்லையும் எடுத்து வெள்ளையர் மற்றும் அவருடன் இருந்த தரகரையும் வேனில் ஏற்றி மஹரகமயில் இறக்கிவிட்டு சென்றது குழு..
வெள்ளையர் மதுஷின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என்றபடியால் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை கல்லை பார்வையிடுவது மட்டுமே. ஆனால் அவரை அழைத்து சென்ற தரகருக்கு இதன் பின்னனியில் மதுஷின் கை இருப்பது தெரியாது.
1. இரத்தினக்கல் வியாபாரியிடம் தரகராக செல்லும் ஒருவருடன் தனது ஆள் ஒருவரை முதலில் இணைப்பது… அதுவே இந்த வெள்ளையர்..
2. பின்னர் இன்னொரு போலி பொலிஸ் ரீமை அனுப்பி அவர்களை மடக்குவது…
இதுவே மதுஷின் மாஸ்டர் ப்ளேன்.. ..
இப்படி மஹரகமவில் இறக்கப்பட்ட வெள்ளையரும் அந்த தரகரும் மீண்டும் கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கல் வர்த்தகரின் வீட்டுக்கு வந்துள்ளன..
அதற்கிடையில் வர்த்தகர் பொலிசுக்கு தகவல் கொடுத்திருந்தார். அப்போதே மதுஷின் கேம் வெள்ளையருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அதனை கட்டிக்கொள்ளாத அவர் பயந்தவர் போல நடித்து வெளியில் வந்து ஓரிரு நாளிலேயே இங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
பொலிஸ் வேடத்தில் வந்து கொள்ளையிட்ட ரீம் கையில் கல் கிடைத்த கையோடு மதுஷிடம் தொலைபேசியில் விடயத்தை சொன்னது..
யாருக்கும் பாதிப்பில்லாமல் கேமை முடித்தீர்கள் என்று அவர்களை அப்போது பாராட்டியுள்ளார் மதுஷ்..
இரத்தினக்கல் விவகாரம் இன்னும் ஓய்ந்து விடவில்லை…
இந்த பின்னணி எதுவும் தெரியாமல் வெள்ளையரை அழைத்து சென்ற தரகரிடம் பொலிஸ் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.
மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த வாரம் இரத்தினக்கல் சொந்தக்காரருக்கு டுபாயில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்…
“ நீ மிகவும் துள்ளுகிறாய்… உனது ஆட்டத்தை நிறுத்திக் கொள்… நல்லவிதத்தில் சொல்கிறோம்…” என்று அந்த அழைப்பில் சொல்லப்பட்டுள்ளது… அதுபற்றி விசாரணைகள் நடக்கின்றன…
மறுபுறம் இந்த இரத்தினக்கல்லை சவூதியில் வேலைசெய்யும்போது அங்குள்ள குப்பை மேடு ஒன்றில் இருந்து எடுத்து குரியர் மூலம் இலங்கைக்கு அனுப்பியதாக சொல்லியுள்ளார் இரத்தினக்கல்லை பறிகொடுத்த வர்த்தகர்.. அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராயப்படுகிறது…
கொழும்பில் சிக்கும் புள்ளிகள்..!
மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களின் இதர சகாக்கள் மத்தியில் ஒரு போட்டி உருவாகியுள்ளது…
அதன் விளைவாக ஆளையாள் காட்டிக் கொடுப்பதன் எதிரொலியாகவே மதுஷின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது..
அதேசமயம் மதுஷின் பணத்தை பெற்று வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்ட பலர் அதிலிருந்து தப்பிக்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் செய்வதாக தெரிகிறது…
கைது செய்யப்பட்டுள்ள மதுஷின் சகாக்கள் பலரிடம் இருந்து கிடைக்கும் தகவல் மூலம் இப்படியானவற்றை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தென்மாகாணத்தில் மதுஷின் பணம் தினமும் வட்டிக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை செய்த பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது…
தனது பணத்தை கொண்டு ஐரோப்பாவில் குடியேற மதுஷ் திட்டமிட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்து முன்னர் கூறியிருந்தேன்.. அதேபோல் அவர் தீவு ஒன்றை விலைக்கு வாங்கவும் திட்டமிட்டிருந்ததாக புதிய தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது..
அதேபோல் மதுஷ் தரப்புடன் தொடர்பு வைத்திருந்த யாழ்ப்பாண வர்த்தக பிரமுகர் ஒருவர் குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன…
அவர் விசாரணை வலையில் சிக்கியுள்ளார்
Previous Post

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

Next Post

பாகிஸ்தானுக்கானஇன்றைய விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் விமான சேவை

Next Post

பாகிஸ்தானுக்கானஇன்றைய விமான சேவைகள் ரத்து - ஸ்ரீலங்கன் விமான சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 2, 2026
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 2, 2026
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures