Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டுவிட்டது!

June 28, 2016
in News, Politics
0

தமிழீழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதப்பட்டுவிட்டது!

சங்க, வைத்தியர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளி ஆகிய சக்திகளின் கீழ் பஞ்ச மகா சக்தியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரொஸ்மிட் பிளேஸ், வோர்ட் பிளேஸ் ஆகியவற்றின் சக்தியாக மாறியுள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் சமஷ்டி நல்லிணக்கம் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கிடைத்தது. அதில் உள்ள விடயங்களின் அடிப்படையில், தேர்தல்களின் இன மற்றும் மத அடையாளங்களை பயன்படுத்த முடியாது.

தேரவாத பௌத்தம் பாதுகாக்கப்பட்டுள்ள நாடுகள் இடையில் இலங்கையில் மாத்திரமே பௌத்த பிக்குகள் இனத்தை பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர்.

காவி உடை இருப்பதால் எதனையும் செய்ய முடியாது என பிரபாகரனும் கூறியிருந்தார். இதனால், காவி உடையை நீக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈழ நாடு உருவானால், அந்த நாட்டின் பிரதான மதமாக கிறிஸ்தவமே இருக்கும். உலக இனங்களில் சிங்கள இனம் ஒரு சிறிய தொகை.

எனினும் இந்த இனத்தை சுற்றி பல சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

சமஷ்டி நிர்வாகம் உருவானால், ஈழ நாடு உருவாகும். ஹலாவத என்ற பெயர் தமிழில் சிலாபம் எனவும் ஆங்கிலத்தின் சிலாவ் என மாறியுள்ளது. இதே விதமாக வடக்கில் பல கிராமங்கள் தமிழாக மாறியுள்ளன.

ஸ்ரீலங்கா என்பதை இலங்கை என்று கூறுகின்றனர். இதனடிப்படையில் பார்க்கும் போது ஈழத்திற்கான உறுதிப்பத்திரம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.

இந்த உறுதிக்கு அமைய எல்லைகளை அமைக்கவே தற்போது தயாராகி வருகின்றனர் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

பாலிவுட்டின் உயரிய விருதான IIFA 2016 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்

Next Post

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

Next Post
புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures