Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சரவை விடயதானம் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியீடு

December 29, 2018
in News, Politics, World
0

புதிய அமைச்சரவைக்குரிய பொறுப்புக்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் செயற்படும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பன வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திருத்தத்தின்படி, இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் தொடர்ந்தும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் காணப்பட்ட பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்க அச்சுத் திணைக்களமும் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி கொலை சதி விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஜனாதிபதியிடம் பொலிஸ் திணைக்களம் காணப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அரச ஊடக நிறுவனங்கள் சிலவற்றையும் ஜனாதிபதி தனது அமைச்சொன்றின் கீழ் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிலை உடைப்பு விவகாரம்: கைது செய்யப்பட்ட 7 பேரிடமிருந்தும் புதிய தகவல்கள்

Next Post

ஹற்றனில் தீ விபத்து: 150க்கு மேற்பட்டோர் பாதிப்பு

Next Post

ஹற்றனில் தீ விபத்து: 150க்கு மேற்பட்டோர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures