தாய்லாந்தின் தேசிய விலங்கான யானைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து அவர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது.
கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற வேடமணிந்த யானைகள் சிவப்பு வெள்ளை உடைகளை அணிந்து பள்ளிக்கு சென்றது. அங்கு யானையை பார்த்த பள்ளி குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.யானை மீது அமர்ந்திருந்த பாகன் பலூன்களையும்.
பரிசு பொருட்களையும் யானையிடம் கொடுத்து அதனை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் யானைகள் பரிசுகளை வழங்கியது. யானையின் கையில் இருக்கும் பரிசு பொருட்களை குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி மகிழ்ந்தனர்.

