Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்

November 21, 2018
in News, World
0

ஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தந்தையே மகளை கொன்ற தகவல் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷும் சுவாதியும் காதலர்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த நந்தீஷை சுவாதி திருமணம் செய்து கொண்டதை, அவரது பெற்றோர் விரும்பவில்லை. இதையடுத்து, காதல் தம்பதி, வீட்டை விட்டு வெளியேறி சூளகிரியில் வசித்து வந்தனர். அப்போது இருவரும் திடீரென மாயமானார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால் நந்தீஷின் சகோதரர் காவல்துறையிடம் புகார் செய்தார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலக்வாடியில் உள்ள காவிரி ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறையினர் சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சீனிவாசன் உள்ளிட்டோர் நந்தீஷ் – சுவாதி தம்பதியை காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. சீனிவாசன் உள்பட ஏழு பேர், காதல் தம்பதியிடம், “நடந்தது நடந்துவிட்டது. இனி அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம். முதலில் கோயிலுக்குச் செல்லலாம்” எனக்கூறி தம்பதியை கடத்திச் சென்றிருக்கின்றனர்.

காரில் வைத்தே அவர்கள் காதல் தம்பதியை கடுமையாக அடித்து உதைத்து சித்திரவதை செய்திருக்கின்றனர். ஓசூரில் கொலை செய்தால் தெரிந்துவிடும் என்பதால் முன்பே தாங்கள் பார்த்து வைத்திருந்த இடமான பெலக்வாடிக்கு சுவாதி மற்றும் நந்தீஷை அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களின் கை கால்களை கட்டி உயிரோடு காவிரி ஆற்றில் தூக்கி வீசி கொன்றனர். இந்தக் கொலையில் சுவாதியின் தந்தை சீனிவாசன் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். பெற்ற மகளை தனது கையாலேயே கொடூரமாக தாக்கியிருக்கிறார். பிறகு கைகால்களைக் கட்டி, ஆற்றில் வீசியிருக்கிறார்.

சாதி வெறியால், பெற்ற மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரம்கொலை நடந்த போது சுவாதி கருவுற்றிருந்ததாக வந்த தகவல் தவறு என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் கார் ஓட்டுநர் சுவாமிநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Previous Post

ஆப்கன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

Next Post

அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பு

Next Post

அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures