Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“முஸ்லிம்களுக்கு மஹிந்தவும், ரணிலும் ஒன்றுதான்”

November 4, 2018
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சர்ச்சை நீடிக்கின்ற சூழலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காய்நகர்த்தல்களை இரு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் ஸ்திரமற்ற ஒரு சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந் நிலை தொடர்வது ஆரோக்கியமானதல்ல. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டுமானால் பாராளுமன்றம் கூட்டப்பட்டு சட்டரீதியான பிரதமர் யார் என்பதை நிரூபிக்க இடமளிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் பற்றி 2015 ஜனவரியில் உரத்துப் பேசிய அதே ஜனாதிபதிதான் இன்று ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பது கவலைக்குரியதாகும்.

இதுவிடயத்தில் ஜனாதிபதி தனது கட்சி, அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நாட்டின் ஜனநாயகத்திற்கும் 2018 ஜனவரியில் மக்கள் வழங்கிய ஆணைக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான சூழலில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான போட்டியே நீடிக்கிறது. இந் நிலையில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் முன் மூன்று தெரிவுகள் உள்ளன.

ஒன்று ரணில் விக்ரமசிங்கவுக்கான தமது ஆதரவைத் தொடர்வது, அடுத்தது மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பது, மூன்றாவது எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிப்பது. இவற்றில் முஸ்லிம் கட்சிகள் எந்தத் தெரிவை மேற்கொள்ளப் போகின்றன என்பதே இன்று முஸ்லிம் சமூகத்தினது மாத்திரமன்றி தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 எம்.பி.க்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 எம்.பி.க்களுமாக மொத்தம் 12 பேரை இலக்குவைத்த காய் நகர்த்தல்களை மஹிந்த அணி முடுக்கி விட்டிருக்கிறது. ஆனாலும், தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கும் என இவ்விரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். எனினும் அதன் பின்னரான காலப் பகுதியில் மேற்படி தீர்மானம் தொடர்பில் இரு முஸ்லிம் கட்சிகளும் அடிக்கடி கூடி மீள்பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.

முஸ்லிம் கட்சிகள் கடந்த காலங்களில் தமது கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளது வரலாறு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட மிகவும் இறுதிக் கட்டத்திலேயே மஹிந்த தரப்பிலிருந்து விலகி, பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்ததை நாம் அறிவோம். அந்த வகையிலும் பாராளுமன்றம் கூடி வாக்கெடுப்பு நடக்கும் கணம் வரைக்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை உறுதிபடக் கூற முடியாது என்பதே நிதர்சனமாகும்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை மஹிந்த தரப்பும் ஒன்றுதான் ரணில் தரப்பும் ஒன்றுதான். இவ்விரு தலைவர்களின் ஆட்சிக் காலத்திலுமே அளுத்கம, கிந்தோட்டை மற்றும் கண்டி வன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு விடயத்தில் யாரையும் நம்ப முடியாத நிலையே தொடர்வது துரதிஷ்டமானதாகும்.

எனினும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் நலன், எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். மாறாக தனி நபர் மற்றும் கட்சி நலன்களை முன்வைத்து எடுக்கும் தீர்மானமானது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மேலும் இருண்ட யுகத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தீர்மானம் எடுக்குமாறு தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா என்பன மு.கா. மற்றும் அ.இ.ம.கா.வை வலியுறுத்தியுள்ளன.

Previous Post

சபை முதல்­வர் பதவியையும் பறித்த மகிந்த குழு

Next Post

ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு

Next Post

ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026
சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026

Recent News

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026
சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures