Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி

September 23, 2018
in News, Politics, World
0

மது குடிக்கும் பழக்கத்தால், உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 30 லட்சம் பேர் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, உயிர்க்கொல்லி நோயான, ‘எய்ட்ஸ்’சால்,பலியாவோர் எண்ணிக்கையை விட அதிகம்.
மது குடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பின் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகம் முழுவதும், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவோர், பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். மது பழக்கத்தால், கல்லீரல் பாதிக்கப்படுவதுடன், உடலின் பல முக்கிய உறுப்புகள், அதன் வழக்கமான செயல்பாட்டிலிருந்து மாறுபட நேரிடுகிறது.

குடும்ப பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள், சாலை விபத்து உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலகின் மிகக் கொடிய நோயாக கருதப்படும், ‘எய்ட்ஸ்’ பாதிப்பால் உயிரிழப்போரை விட, குடி பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

கடந்த, 2016ல், உலக முழுவதும் உயிரிழந்தோர் மற்றும் அதற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், எய்ட்ஸ் நோய் பாதிப்பால், 1.8 சதவீதம் பேர், சாலை விபத்தில், 2.5 சதவீதம் பேர் மற்றும் வன்முறை, கலவரங்களால், 0.8 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம், மது பழக்கத்தால், 5.3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்; இது, உலக மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், மது பழக்கத்திற்கு அடிமையானோர் எண் ணிக்கை அதிகம் உள்ளது.

மது பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகளால், உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளான, இந்தியா, சீனாவிலும், மது குடிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.உலகெங்கும் இளைஞர்கள் முதல், முதியோர் வரை அனைத்து தரப்பினரையும் மிரட்டி வரும் மனச்சோர்வு நோய், மது குடிக்கும் பழக்கம் உடையோரை மிக விரைவில் தாக்குகிறது.

மது பழக்கத்தை ஒழித்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உலக நாடுகள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 மடங்கு, ‘குடி’க்கும் இந்தியர்கள் : உலகம் முழுவதும், மது அருந்தும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, உலக சுகாதார நிறுவனம், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

அதன் விபரம்:உலக அளவில், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளது. இந்த மாற்றம், 2000ல் இருந்து 2005க்குள் நிகழ்ந்துள்ளது.

ஒரு ஆண்டில், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு, 2005ல், 5.5 லிட்டராக இருந்தது; 2010ல், 6.4 லிட்டராகஉயர்ந்தது; 2016 வரை, 6.4 லிட்டராகவே உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, 2005ல், தனி நபர் அருந்தும் மதுவின்அளவு, ஆண்டு ஒன்றுக்கு,2.4 லிட்ட ராக இருந்தது. பின், மெல்ல அதிகரித்து, 2016ல், 5.7 லிட்டராக உயர்ந்துள்ளது.

இந்திய ஆண்கள், ஆண்டுக்கு, 4.2 லிட்டர்; பெண்கள், 1.5 லிட்டர் மது அருந்துகின்றனர்.உலகம் முழுவதும், தனி நபர் அருந்தும் மது அளவு, 2025க்குள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில், மேலும் உயரும் என தெரிகிறது.இந்தியாவில் மட்டும், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு, ஆண்டுக்கு, 2.2 லிட்டர் வரை கூடுதலாக வாய்ப்புள்ளது.

மது அருந்துவதால் ஏற்படும் நோய்களால், 2016ல், உலகம் முழுவதும், 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது, அந்த ஆண்டில் நிகழ்ந்தஉயிரிழப்புகளில், 5.3 சதவீதம்.

காச நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கையை விட, மது அருந்துவதால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

ஈரான் ராணுவ அணி வகுப்பில் துப்பாக்கிச்சூடு: 29 வீரர்கள் பலி

Next Post

நபர் ஒருவரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் – காரணம் என்ன?

Next Post
நபர் ஒருவரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் – காரணம் என்ன?

நபர் ஒருவரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் - காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures