Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்- எம்.இராஜேஸ்வரன்

September 22, 2018
in News, Politics, World
0

இலங்கையில் போர் நிலவிய சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு காலம் தாழ்த்தாது பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில்,

இந்நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் உள்ளது. 1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஆயுதப்புரட்சியினை மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ( JVP ) கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதன் மூலம் இவர்கள் இன்று ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதே மாதிரியான சந்தேகத்தின் பேரில் வகை தொகை இன்றி கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி பல வருடகாலமாக மன விரக்தியுடன் வாழ்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை தமிழர்கள் என்ற காரணத்திற்காகவா ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் உள்ளார்.

முன்னாள் ஆட்சியாளர்களை அதாவது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினரை வீட்டிற்கு அனுப்பி வைத்து இந்நாட்டில் நல்லாட்சியைத் தோற்றுவித்து சுதந்திரக்காற்றை சுத்தமாக சுவாசிப்பதற்கு அளப்பெரிய பங்களிப்பை நல்கிய தமிழர்களின் விடயங்களில் ஏனோ தானோ என்று ஜனாதிபதி இருப்பது ஏன்?

1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் JVP கிளர்ச்சி இடம்பெற்றது. இக்காலத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறைவாசத்தின் வலியை உணர்ந்த மைத்திரிபால சிறிசேன தனக்கு நிகழ்ந்த சம்பவம் என்னவென்பதை உணராதவரா?

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல்கால அறைகூவலில் ஒன்றாக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை தூக்கிப்பிடித்துப் பேசியவர்கள் இன்று மௌனமாக இருப்பது ஏன்?

எனவே மனக்காயங்களுடன் குடும்பங்களைப் பிரிந்து சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிளுக்கு கருணை கூர்ந்து பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை

Next Post

டயர் துண்டு களஞ்சியசாலையில் தீ

Next Post

டயர் துண்டு களஞ்சியசாலையில் தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures