Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரின் விடயத்தில் பாரபட்சமாக நடக்கும் தொல்லியல்,வனவள திணைக்களங்கள்- சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

September 10, 2018
in News, Politics, World
0

போருக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காஞ்சூரமோட்டை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் என்பவற்றுக்கு விஜயமொன்றை மேற்கொண்டபின்னர் அவரால் வெளியிடப்பட்ட ஊடக செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த அரசாங்கம் வவுனியா வடக்கின் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையினக் குடியேற்றங்களை செய்துள்ளது. எங்கள் மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத பிறமாட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் இந்தப்பிரதேசங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான குடியேற்றங்கள் செய்யப்பட்டபோது பின்பற்றாத வனவளச்சட்டங்கள் தற்போது தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும்போது அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்றது.இந்தியாவிலிருந்து மீளத்திரும்பிய 35 குடும்பங்கள் மருதோடையில் மீளக்குடியேற விருப்பங்கொண்டிருந்தார்கள். அவர்களை மீளக்குடியேற்ற மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தேன்.

அத்துடன் மேலும் குடியேற பல குடும்பங்கள் விரும்புகின்றன. அவர்களையும் மீளக்குடியேற்றுவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினூடாக செய்யப்பட்டுவருகின்றது. இவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் வனவளத்திணைக்களம் மீள்குடியேற்ற அபிவிருத்தி வேலைகளை தடுத்துள்ளது.இதேபோன்றே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளை தொல்லியல் திணைக்களம் தடுத்துள்ளது. தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் இந்துக்களின் புராதன ஆலயமான வெடுக்குநாறி மலைக்கு தடை விதித்துள்ளமை இந்த இரண்டு திணைக்களங்களும் தமிழ் மக்களின் விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதை உறுதிப்படுத்துகின்றது.இவ்வாறான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கவே செய்யுமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழில் வேலையில்லா பிரச்சினை அதிகரிக்க என்னகாரணம்?விளக்குகிறார் அரச அதிபர்

Next Post

யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Next Post
யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures