உலக நாடுகளை அணுஆயுதங்களை காட்டி மிரட்டி வந்த வடகொரியா மற்றும் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை மிரட்டி வந்த இரு தலைவர்களும் தென்கொரியா மற்றும் சில நாடுகளின் ஏற்பாட்டின்பேரில், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்து பேசினார். வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக இது போற்றப்பட்டது. அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டுள்ளதாக கூறி வடகொரியா, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும்கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
வடகொரியாவில் பல நல்ல விஷயங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், “வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதையும், ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி விட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
இந்த விஷயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு காரணம், அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகளே என்றும். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர், கிம் உடன் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “இது மிகவும் சாத்தியமாகும், ஆனால் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.” என்றவர் இனி என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கு தெரியும்? என்ற டிரம்பப் நாங்கள் மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்றும் தெரிவித்தார். ஆனால், சந்திப்பு எங்கே நடைபெறும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.