Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண தேர்தல் தொடர்பில்- இந்த வாரத்துக்குள் அறிவிப்பு

May 24, 2018
in News, Politics, World
0

எல்லை நிர்­ணய அறிக்கை சம்­பந்­த­மா­க­வும், மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பி­லும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த வாரத்­துக்­குள் அறி­விப்­பொன்றை விடுப்­பார் என்று சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய நேற்­றுத் தெரிவித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தினப்­ப­ணி­கள் முடி­வ­டைந்த பின் னர் ஒழுங்­குப் பிரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய பொது எதி ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டலஸ் அழ­கப்­பெ­ரும, மூன்று மாகாண சபை­க­ளின் ஆயுள்­கா­லம் முடி­வடைந்து எட்டு மாதங்­கள் கடந்­துள்ள போதி­லும் இன்­னும் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டை­யில் மேலும் மூன்று சபை­க­ளின் ஆயுள்­கா­ல­மும் இன்­னும் நான்கு மாதங்­க­ளுக்­குள் நிறை­வுக்கு வர­வுள்­ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் எல்லை நிர்­ணய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு, இழுத்­த­டிக்­காது தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபைக்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார். அந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வால் மார்ச் 8ஆம் திகதி எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அது குறித்து விவா­திப்­ப­தற்கு அக்­கறை காட்­டப்­ப­ட­வில்லை. தேர்­தலை இழுத்­த­டிப்­ப­தற்கு அரசு முற்­ப­டு­கின்­றது என்­பதே இதன்­மூ­லம் புல­னா­கின்­றது. இது குறித்து சபா­நா­ய­கர் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும்.

மாகாண சபைத் தேர்­தலை ஒத்­தி­வைக்க முடி­யாது என்று உயர்­நீ­தி­மன்­ற­மும் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. மாகாண சபைத் தேர்­த­லும் அர­ச­மைப்பு தொடர்­பு­ப­டு­கின்­றது. சபா­நா­ய­க­ரும் அர­ச­மைப்பை மீறும் வகை­யில் செயற்­ப­டக்­கூ­டாது. வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­யின் பிர­கா­ரம் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­வர்­த­ன­வும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார். இதற்­குப் பதி­ல­ளித்த சபா­நா­ய­கர், இந்­தப் பிரச்­சினை குறித்து நானும் அதிக கவ­னம் செலுத்­தி­யுள்­ளேன். தலைமை அமைச்­ச­ரு­டன் நேற்று முன்­தி­ன­மும் பேச்சு நடத்­தி­னேன். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் பேச வேண்­டி­யுள்­ளது என்று தலைமை அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

எப்­ப­டி­யி­ருந்த போதி­லும் இந்­தப் பிரச்­சினை குறித்து இந்த வாரத்­துக்­குள் அறி­விப்­பொன்றை விடுப்­பார். அதன்­பின்­னர் எம்­மால் விவா­திக்­கக் கூடி­ய­தாக இருக்­கும். சபை முதல்­வ­ருக்­கும் இது பற்றி அறி­விக்­கின்­றேன் – என்­றார்.

Previous Post

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

Next Post

மழை நீடிக்­கும் சாத்­தி­யம்!!

Next Post

மழை நீடிக்­கும் சாத்­தி­யம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures