நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.