Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிள்ளை வரம் கேட்டு சென்ற என் தங்கை எங்கே

April 28, 2018
in News, Politics, World
0

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண் சுவிஸ் வந்துள்ள நிலையில், அவர் வாழ்க்கையில் எவ்வாறு போராடி வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட புனிதா,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக நான் இன்று சுவிட்சர்லாந்தில் வாழ்கிறேன். எனது சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கின்றார்கள்.

என் இரட்டை சகோதரி புஷ்பா 2002 ல் காணாமல் போனார். அவர் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு நாள் மாலை, அவர் கோவிலுக்கு செல்ல விரும்பினார், ஆனால் நான் அவரிடம் போகக் கூடாது, அது மிகவும் ஆபத்தானது என கூறினேன்.

எனினும் அவர் குழந்தை இல்லாத விடயம் குறித்ததான வேண்டுதலுக்காகவே அவர் கோவிலுக்கு சென்றார். அவ்வாறு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.

அவருக்கும் அவரது கணவருக்கும் என்ன நடந்ததென இன்னமும் எனக்கு தெரியாது. இதன் காரணமாக அச்சம் அடைந்த எனது பெற்றோர் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர் ஒருவரை இலங்கையில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். 2012ம் ஆண்டு நானும் மகனும் கணவரின் நாடான சுவிஸ் சென்றேன்.

இலங்கையில் ஆபத்தான நிலையில் வாழ்ந்த எனக்கு சுவிட்சர்லாந்தில் வாழக் கிடைத்தமை ஒரு அதிஷ்டமாகவே கருதுகிறேன்.எனினும் எங்கள் ஊனமுற்ற மகனின் பாதுகாப்பு காரணமாக நாங்கள் ஒரே குடும்பமாக ஒன்றாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு Langnau பாடசாலையில் மகனுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அங்கு அவர் நன்கு ஆதரிக்கப்பட்டு வருகிறார்.

எனது மகன் Langnau பாடசாலைக்கு சென்ற பின்னரே பேசத் தொடங்கினார். அவர் முன்னர் எதுவும் கூறியதில்லை. அவர் தமிழ் மொழியில் கூட ஒரு வார்த்தை கூறியதில்லை.

மூன்றரை வயதுடைய எங்கள் இரண்டாவது மகன் பாலர் பாடசாலைக்கு செல்கிறார். இவ்வாறான நிலையில் ஒரு ஜேர்மன் மொழி பாடநெறியில் இணைய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இதனால் நான் கடந்த ஆண்டு ஒரு விற்பனையாளராகினேன். Langnauவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே உள்ள இடங்களிலுள்ள மக்கள் மிகவும் நட்புடனே உள்ளனர்.

சில நேரங்களில் நாம் அவர்களுடன் சிறிய உரையாடலை அல்லது ஒரு நீண்ட உரையாடலில் கூட ஈடுபடுவேன். என்னை பார்ப்பவர்கள் என்னிடம் ஹாய் புனிதா! என்பார்கள்.

ரயில்களில் நான் பத்திரிகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். இதனால் நிறைய பேருக்கு என்னை தெரியும்.

சுவிட்சர்லாந்தில் என் வாழ்க்கையை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். ஆனால் எனது பெற்றோர் குறித்த வருத்தம் எனக்கு உள்ளது.

என் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, வீட்டுப் பொருளாதாரம் குறித்து Swiss Workers’ Relief Agency Bern என்ற நிறுவனத்தில் ஆறு மாத கால படிப்பில் இணைந்துள்ளேன்.

இலங்கையில், உள்நாட்டு சேவையில் முதன்மையாளராக பணியாற்றினேன். 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஆசிரியராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது, நான்காம் மற்றும் ஐந்தாவது வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் இலக்கணத்தை நான் கற்பித்தேன். எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அது முடிவடைந்தது.

உள்நாட்டு போர் காரணமாக நான் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த Swiss Workers’ Relief Agency Bern படிப்பில், என் அறிவை விரிவுபடுத்தவும் ஜேர்மன் மொழியை மேம்படுத்தவும் முடியும்.

முதல் இரண்டு மாதங்களில், ஒவ்வொரு காலையிலும் பாடசாலைக்கு சென்று, ஜேர்மனில் பேசுவதும், கேட்பதும் உட்பட, இந்தத் துறையின் மிக முக்கியமான சொற்களையே கற்றுக்கொள்வேன். அதன்பின், ஒரு Spitex அமைப்பு அல்லது ஒரு வீட்டில் நான்கு மாத வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது என் நாட்கள் மிகவும் பரபரப்பாக உள்ளன. என் மகனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் நான் பத்திரிகைகளை விற்கிறேன், பிறகு பணி செய்யும் வீட்டுக்குப் போகிறேன்.

மகனுக்கு பாடசாலை முடிந்தவுடன் எனது கணவர் மகனை பார்த்து கொள்வார். இதனால் ஏனைய சில வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என புனிதா தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

Next Post

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

Next Post

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures