Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது ‘ஆரஞ்சு ஆர்மி

April 25, 2018
in Sports
0
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது ‘ஆரஞ்சு ஆர்மி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 23வது லீக் போட்டி, மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ், 18. 4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் யூசுப் பதான் தலா 29, மணீஸ் பாண்டே 16, முகமது நபி 14 ரன்கள் எடுத்தனர்.

மெக்கிளனகன், ஹர்திக் பாண்டியா, மயங்க் மார்கண்டே தலா 2, பும்ரா, முஸ்டாபைஜூர் ரகுமான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிக சிறிய இலக்கு என்பதால், மும்பை எளிதாக எட்டிவிடும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆரஞ்சு ஆர்மி என செல்லமாக அழைக்கப்படும் சன்ரைசர்ஸ் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் மும்பை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் மும்பை, 18. 5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அசத்தலாக வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் 34, குர்ணல் பாண்டியா 24 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர்.

எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சித்தார்த் கவுல் 3, ரஷித்கான், பாசில்தம்பி தலா 2, சந்தீப் சர்மா, முகமது நபி, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ், அதன்பின் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.

எனினும் தற்போது மும்பைக்கு எதிரான போட்டியின் மூலம், சன்ரைசர்ஸ் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

முன்னதாக சன்ரைசர்ஸ் தோல்வியடைந்த 2 போட்டிகளிலும், அதன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் சிறப்பாக பந்து வீசவில்லை.

ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதில், ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.

இதனால் அவருக்கே ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. நான் பார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக ஒரு சில தோல்விகளுக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

எங்கள் அணியின் பயிற்சியாளர்களிடம் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்று கொள்கிறோம்.

பயிற்சியாளர்களிடம் நாங்கள் நிறைய பேசுவோம் (டாம்மூடி-தலைமை பயிற்சியாளர், முத்தையா முரளிதரன்-பந்து வீச்சு பயிற்சியாளர், விவிஎஸ் லட்சுமணன்-ஆலோசகர்). அவர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.

குறிப்பாக முத்தையா முரளிதரன் சார் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். என்ன நடந்தாலும், மிகவும் ‘ரிலாக்ஸ்’ ஆகவும், மிகவும் அமைதியாவும் இருக்க வேண்டும் எனவும், அடிப்படை விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் எனவும் அவர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post

CSK vs RCB மேட்ச்ல ரெண்டு பேருமே ஜெயிக்கணும்

Next Post

சிந்தனையிலேயே இருந்து விட்டோம்-மீள முடியவில்லை

Next Post
சிந்தனையிலேயே இருந்து விட்டோம்-மீள முடியவில்லை

சிந்தனையிலேயே இருந்து விட்டோம்-மீள முடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures