இன்று முதல் இலங்கையில் புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
நாளை முதல் இலங்கையில் புது ஆபத்து அறிமுகம்!
இலங்கையில் 6 வகையான நோய்களை உருவாக்கும் இறால் இனம் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னமெய் என்ற இந்த இறால் இனமே, நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த இறால் இனம் இலங்கையில் காணப்படவில்லை எனவும், இதனால் 6 வகையான நோய்கள் உருவாக்கப்படும் எனவும், குறித்த இறால் இன வளர்ப்பை இலங்கையில் தடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.